Friday, September 24, 2010

உயர்வுள்ளல்...

உயர்வுள்ளல்...


கவிதைப் பின்புலம்:

மூலிகை பெட்ரோல் புகழ் ராமர் பிள்ளை, இந்த முறை கடல் நீரை பெட்ரோலாக்கி காட்டப் போவதாக சவால் விட்டுள்ளார். அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று சென்னையில் 1 லட்சம் லிட்டர் கடல் நீரை எரிபொருளாக்கிக் காட்டப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

உண்மையில் கடல் நீரால் பெட்ரோல் செய்து காட்டி விட்டால் மாபெரும் மேதை என ஒத்துக் கொண்டு நாமும் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம் தானே. என்ன சொல்கிறீர்கள்?
.

நன்றிகள்: http://narumugai.com/?p=13088

***


கடல் நீரில் குடி நீர்
கண்டு விட்டது உலகம்;..
கடல் நீரில் எரி பொருளா?
கதையா? நிஜமா?
இராமர் பிள்ளை
நம்பிக்கை இராமரா?
கொறிக்கும் அணிலா?
பொறுத்திருந்து பார்ப்போம்?

வெற்றி பெற்றுவிட்டால்...
தமிழகத்தில் ஒவ்வொரு
நகர ஊருக்கும்
தினம் தினம்
விமானச் சேவை
ஓட்டலாம் தான்....

வண்டி மாடுகளுக்கு
கண்டிப்பாய் விடுதலை...
இழுப்பு உழவென
பெட்ரோலிலே விவசாயம்...
சென்னைத் துறைமுகமே
எண்ணைத் துறைமுகமாய்...

அமெரிக்கர்களுக்கு தமிழகத்தில்
அளிப்போம் வேலைவாய்ப்பு...
இந்தியன் விசாவிலை
அயல்நாடுகளில் அதிகரிப்பு!
கருநாடகா காவேரி
கூவத்திலே கூட்டணி!!!
அடடா அடடா
கற்பனைக்கேது எல்லை?

உள்ளுவதெல்லாம் உயர்
உள்ளல் வேறல்ல!
நடப்பவை எல்லாம்
நல்லதாக நடக்கட்டும்!!
நல்லதே நடக்கட்டும்!
ஆல் தி பெஸ்ட்
இராமர் பிள்ளை!

***

No comments:

Post a Comment