Friday, September 24, 2010

சரியான மூக்குடைப்பு?

சரியான மூக்குடைப்பு?


கவிதைப் பின்புலம்:

இன்றையச் செய்தி: மகாபலிபுரத்தில் மாமல்லன் சிலை உடைப்பு
மகாபலிபுரம்: மகாபலிபுரத்தில் மாமல்லன் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித்து எம்எல்ஏ தலைமையில் பாமககவினர் போராட்டம் நடத்தினர். திருக்கழுக்குன்றத்தில் பஸ்கள் மீது கல்வீச்சும் நடந்தது. மகாபலிபுரம் பைபாஸ் ரோட்டில் மாமல்லன் சிலை உள்ளது. இந்த சிலையை யாரோ உடைத்துள்ளனர்.
மேலும் வன்னியர் சங்க கல்வெட்டு மற்றும் பாமக கொடிக் கம்பத்தையும் சேதப்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து இன்று காலை செங்கல்பட்டு எம்.எல்.ஏ. திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமையில் பாமகவினர் மகாபலிபுரத்தில் குவிந்தனர்.
ஆர்ப்பாட்டம் நடத்திய அவர்கள் பின்னர் மறியலிலும் ஈடுபட்டனர். சிலையை உடைத்தவர்களை கைது செய்யக் கோரி கோஷமிட்டனர்.
இந்தப் போராட்டத்தால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.
சிலை உடைப்பைக் கண்டித்து திருக்கழுக்குன்றத்தில் 2 பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டன. இதையடுத்து அங்கு கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

http://thatstamil.oneindia.in/news/2010/09/22/mamallan-statue-damaged-mahabalipuram.html

***


சிலை உடைப்பைக் கண்டித்து பேருந்து உடைப்பா?
பேருந்து உடைப்பைக் கண்டித்து எதை உடைக்கலாம்?
உடைப்போர் மண்டைகளையா? கைகளையா? முதுகெலும்பையா?
உடைக்க வேண்டிய வருணமும், ஜாதியும், மதமும்
உடைபட்ட சிலைகளின் இடை வெளிகளிலும் கூட
எகத்தாளமாய்த்தான் இன்னமும் கை கொட்டிச் சிரிக்கிறது!!!
உணர்வற்ற உள்ளங்களினால் உடைபட்டுக் கிடக்கிறது உலகம்....
மமதையுற்ற நெஞ்சுக்களில் மங்கிக் கிடக்கிறது ஒளி...
உண்மையான விடிவு எற்றைக்கு எம் மனிதர்காள்?

***

No comments:

Post a Comment