Monday, December 20, 2010

தமிழர் உலகம்!

தமிழர் உலகம்!

கிளைகளில் கூடு கட்டினால்
வேரிலே தீ;
கிளையில் இலை துளிர்த்தால்
வேரிலே வென்னீர்
கிளைகளிலும் பல வேளைகளில்
இலைகள் உதிரும்
வெட்கத்தைத் தொலைத்த வேர்களில்
சாதனை மவுனம்

மகரந்தச் சேர்கைக்காக அலைகிறது
மன்மத அம்புகள்
நகல்களின் புதுப்பிப்பில் நக்கலாய்
நோபல் கனவுகள்
உறக்க உல்லாசத்தில் விழிக்க
மறுக்கும் மாக்கள்
எச்சில் சுகத்தில் குரைக்கும்
சில்லறை ஜால்ராக்கள்

சுரண்டலின் மிச்சத்தில் எலும்பாய்
சோம்பல் சாலைகள்
சுய முன்னேற்றங்கள் இடைத்
தரகர் பேரத்தில்
இலவச முதலீட்டில் கொழித்துச்
செழிக்கிறது கொள்ளை
மறக்காமல் தமிழுக்கும் அவ்வப்போது
இலஞ்ச அர்ச்சனை

இணையமா? உலகமா? இசையா.
இணையா இதயங்கள்
போட்டியால் அல்ல பொறாமையால்
புகையும் எரிச்சல்கள்
திருட்டையும் ரசிக்கும் மாந்தரின்
இளித்தவாய் வேடிக்கை
நண்டுக் குணத்தால் என்றுமே
நொண்டும் குதிரை
சண்டிமாடாய் தனித்தீவாய் முன்னேற
மறுக்கும் சமூகம்

அறிவிலிகள் தேசத்தில் என்றும்
அறிவாளிகள் சிறுபான்மை
வீரியம் கொண்ட வித்துகள்
மாத்திரம் காற்றில்
நம்பிக்கை ”யாதும் ஊரே
யாவரும் கேளிர்”!
வசந்தம் என்பதும் சுழற்சியில்
நிச்சயிக்கப்பட்ட விதியே!

***

4 comments:

  1. நீங்கள் நித்தியானந்த பற்றி கவிதை ஒன்றினை எனது பதிவொன்றில் பின்னூட்டமாக இட்டிருந்தீர்கள்...

    இது இந்த இணைப்பில் இருக்கும் கவிதை...
    http://thamilkavithaikal.blogspot.com/2010/03/blog-post_29.html

    இப்போது அந்த கவிதையை எனது பதிவொன்றில் பயன்படுத்த விரும்புகிறேன்... அதற்கு உங்கள் அனுமதி தேவை... பதிலுக்காக காத்திருக்கிறேன்...

    ReplyDelete
  2. பயன் படுத்திக் கொள்ளுங்கள் நண்பரே. பயன்படுத்த அனுமதி கேட்ட உங்கள் நேர்மையைப் பாராட்டுகிறேன். நன்றி.

    - உத்தமபுத்திரா

    ReplyDelete
  3. உங்களுடைய கவிதையை எத்தனை பேர் ரசித்து படித்திருக்கிறார்கள் என்று வந்து பாருங்கள்... நீங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவீர்கள்...

    http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_04.html

    ReplyDelete
  4. மேலும் எனது வாசகர்களில் ஒருவரான Jayadev Das சில பின்னூட்டங்கள் போட்டிருக்கிறார்... முடிந்தால் / விருப்பமிருந்தால் அவருக்கும் பதில் சொல்லுங்கள்...

    http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_04.html

    ReplyDelete