Showing posts with label ஹைக்கூ கவிதைகள். Show all posts
Showing posts with label ஹைக்கூ கவிதைகள். Show all posts

Friday, April 2, 2010

ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள்


மேகம்.
உருகாமலும் கரையாமலும்
மிதக்குதே வெயிலில் !
”மேகம்”

தென்றல் காற்றுக்கு மாத்திரம்
கரைந்து உருகும் பஞ்சுப் பொதி
மேகம்!

மழை.
யாரைக் தாக்க
சரம் சரமாய் அம்புகள் ?
"மழை"

பனிக்கட்டி. (ஐஸ் கட்டி)
என்ன ஆச்சரியம்!
கெட்டிப்பட்ட படிகத்
தண்ணித் துண்டு
நீரிலேயே மிதக்குதே
பனிக்கட்டி!

நெருப்பு.
நேரில் மோதினால்
நீரிலே அழியும்
"நெருப்பு"

வானவில்.
இயற்கை எங்கோ
ஓவியம் தீட்டத் தொட்டுக் கொள்ளும்
வண்ணக் கலவைப் பேழை
"வானவில்"

மின்னல்.
வானம் சொன்னது:
மழை என்ன அழுகையா?
ஸ்மைல் ப்ளீஸ்...சீஸ்...

இடி.
அடை மழையிலும்
விடாது வெடிக்கும் பட்டாசு
"இடி"

பூ.
மொட்டாகி, மலராகி அடச்சே ...
வாடி உதிர்ந்துபோகும் வாழ்க்கைதானா?
"பூ"

உலகம்.
உருண்டு கொண்டே இருக்கிறது
விடியலைத் தேடி
உலகம்!

உருண்டு கொண்டே இருக்கிறது
வெயிலை, வெப்பத்தை, வெளிச்சத்தைத் தேடி
"உலகம்"

மனிதா.
உன்னை வலைக்குள்
சிறை செய்யப் போதும்
ஒரு கொசு!

காற்று.
குழல் இசையைக் கடத்திவிட்டு
அடுத்தொரு மூச்சாய்
காற்று!

சாலை.
உன்னையும் என்னையும்
இணைக்கும் கம்பியாய் தரையில்
சாலை!

வாயிற் பாய்: (Door mat)
எவ்வளவுதான் அழகாக இருந்தாலும்
வரவேற்பில் மிதிவாங்குவது என்னவோ
வாயிற் பாய்தான்!

சேமிப்பு:
எறும்பும், தேனியும் மாத்திரமே சேமிக்கின்றன.
வாழ்வில் நம்பிக்கை அதிகமோ
விலங்குகளுக்கு?

***