Thursday, December 31, 2009

2010 புத்தாண்டே வா...!

2010 புத்தாண்டே வா...!


புதிய ஆண்டே வா...!
புதுமைகள் அனைத்தும் தா...!

ஆலம் விருட்சமாய்
        அன்னைத் தமிழகம்
திசைகளில் எல்லாம்
        கிளைகள் பரப்ப...
கலைகள் வளர்ந்து
        கணினிகள் பெருகி
முத்தமிழ் இன்னும்
       முன்னிலை செல்ல
                                                                (புதிய)
வாய்ப்புக்கள் குவிந்து
        வறுமைகள் அழிந்திட
வல்லுனர் மிகுந்து
        வளம்பல கொளிக்க
வள்ளுவம் வகுத்த
        நல்லறம் பேண
சுற்றும் புறமும்
        சுகநலம் காண
                                                                (புதிய)
மக்களின் நெஞ்சில்
        மகிழ்வே பிறக்க
மானில மானிடர்
        மானுடம் பெருக்க
அறிவும் திறனும்
        அன்பும் பெருக
வேற்றுமை நீங்க
        ஒற்றுமை ஓங்க
                                                                (புதிய)
சான்றோர் நிறைந்த
        சமுதாயம் சமைக்க
வந்திடும் சந்ததி
        சிந்தையில் செறுக்க
சாத்தியம் படைக்க
        சரித்திரம் உரைக்க
மூத்த குடிமகன்
        முன்னிலும் சிறக்க
                                                                (புதிய)
உயர்ந்த உளமும்
        ஓங்கிய பார்வையும்
தெளிந்த செயலும்
        நாமாய் இருக்க
ஊனில் உணர்வில்
        தமிழே நிறைந்து
உலகம் என்றும்
        நமதாய் இருக்க...
                                                                (புதிய)

***

2 comments:

  1. //முத்தமிழ் இன்னும்
    முன்னிலை செல்ல//

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிகள் நண்பர் சே.குமார் அவர்களே.

    தொடருவோம்...

    ReplyDelete