| ஆருயிரே... ஆருயிரே... |
| |
| ஆருயிரே... ஆருயிரே... ஆருயிரே... ஆருயிரே... ஆருயிரே நீ அழகு நிலாவென பாடிய பாவலன் தெருவினிலே தேடுகிறேன் உனைத் தினந்தோறும் தென்றலே எங்கு நீ சென்றாயோ? (ஆருயிரே... ஆருயிரே...) ஓடையிலோர் நாள்நீ நீராடும் கோலம் ஓடையிலே நான் பாடிய கீதம் ஜாடையிலே அவை சகலமும் பேசி ஜனித்ததங்கே நம் காதலின் தீபம் ஏனிந்தக் கோபம் நான்வரும் நேரம் உன்வாடைக் காற்றும் நெடுந்தூரம் போகும்... (ஆருயிரே... ஆருயிரே...) கார்கால மேகம் எழுதாத விளக்கம் கண்ணீரில் நீதரும் இணையாத நெருக்கம் போறாத காலம் புதியதோர் வானம் என்குரல் கேட்க அலையுது நாளும் வாழ்வோம் சகியே வழிகளை வகுப்போம் வாசலின் ஓரமுன் பூமுகங் காட்டு (ஆருயிரே... ஆருயிரே...) ஆருயிரே நீ அழகு நிலாவென பாடிய பாவலன் தெருவினிலே தேடுகிறேன் உனைத் தினந்தோறும் தென்றலே எங்கு நீ சென்றாயோ? |
| |
| *** |
Showing posts with label பாடல். Show all posts
Showing posts with label பாடல். Show all posts
Saturday, April 17, 2010
ஆருயிரே... ஆருயிரே...
Monday, March 29, 2010
ஊடலா...கூடலா...
| ஊடலா...கூடலா... |
| (ஒரு காதல் பாடல்) |
| |
| ஆண்: அன்பெனும் மொழி காட்டி ஆசையில் விழி காட்டி இன்பத்தை எனக்[கு ஊ] கூட்டவா... - கண்ணே ஈகையை எனக்[கு ஊ] கூட்டவா... பெண்: அன்பெனும் மொழி கூட்டி ஆசையில் விழி கூட்டி இன்பத்தை எனக்[கு ஊ] கூட்டவா... - கண்ணா ஈகையை [கு ஊ] கூட்டவா... ஆண்: உண்மையின் முகம் காட்டி ஊமையின் அகம் காட்டி எண்ணத்தில் பொருள் கூட்டவா... - கண்ணே ஏழைக்கு அருள் காட்டவா... பெண்: உண்மையின் முகம் காட்டி ஊமையின் அகம் காட்டி எண்ணத்தில் நிறை காட்டவா... - கண்ணா ஏழைக்கு அருள் காட்டவா... ஆண்: ஐயத்தின் மருள் நீக்கி அகிலத்தின் இருள் நீக்கி ஒளிதரும் நிலவாகி வா... - கண்ணே ஓவியக் கலையாகி வா... பெண்: ஐயத்தின் மருள் நீக்கி அன்னையின் பசி போக்கி ஒய்யார அழகோடு வா... - கண்ணா ஓயாத எழிலோடு வா... ஆண்: கன்னத்தில் நிறங் கூட்டி காவியத் திறங் காட்டி சந்தனத்* தமிழேநீ வா... - கண்ணே சாதனைக் கவியொன்று தா... *சந்தத்துத் பெண்: சிந்தனைக் கரு வாகி சேயெனும் உயிர் ஆகி செங்கதிர் ஒளியாகி வா... - கண்ணா செந்தமிழ் மதியாக வா...(?)... ஆண்: பண்ணெனும் இசை யாகி பாவனை மழை ஆகி மெல்லெனும் சிறகாக வா... கண்ணே மேனியில் உறவாட வா ...(?)... பெண்: நெஞ்சினில் சுவை நாடி நேர்மையைக் கவி பாடி மஞ்சத்தில் விளையாட வா... கண்ணா மனதினில் விளையாட வா...(?)... இருவரும்: அன்பெனும் மொழி காட்டி ஆசையில் விழி காட்டி இன்பத்தை எனக்[கு ஊ] கூட்டவா... - கண்ணே ஈகையை எனக்[கு ஊ] கூட்டவா... |
| |
| *** |
Subscribe to:
Posts (Atom)