Saturday, February 13, 2010

ஜெயகாந்தன்...!

ஜெயகாந்தன்...!


அண்மைச் செய்திகள்:
http://vimarisanam.wordpress.com/2009/09/16/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/
http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=%u2018Kanimozhi%2c+literary+heir+of+MK%u2019&artid=xy19vXS4sgE%3d&SectionID=lifojHIWDUU%3d&MainSectionID=lifojHIWDUU%3d&SEO=&SectionName=rSY%7c6QYp3kQ%3d/

ஜெயகாந்தன் தர்மம் ஒருவகையென்றால் நமது தர்மத்தை நாம் நிறுத்தலாமா?

ஜெயகாந்தன்...!

மனித நேயம் பேசும்
முரட்டுக் காகிதப் பூ...

அன்புடன் விசாரிக்கும்
மனிதர்களையும்
”எழுத்தாளன் என்ன
வாசகனின் வேலைக்காரனா?”
என அலட்டல் பேசி
வருத்தும் போலி...
மேதாவி...

சமஸ்கிருதத்தையும்
சஹஹிருதயரையும்
கொடிப்பிடித்து
தமிழைப் புறம் தள்ளிப்
பின்னர்
தமிழைத் தவிர
வேறு அறியேன்...
நான் தமிழ்த் துரோகி அல்ல...
என்று
அடிக்கடி அடிசறுக்கி
ஆட்டம் இழக்காத
மத யானை...

’தமிழர்கள் நாய்களைப் போல்
தங்களைத் தாங்களே
நக்கிக் கொள்ளும் இயல்புடையோர்’
எனப் பேசும் அறிவு ஜீவி!
ஆணவத்தையும் அறிவையும்
பின்னங் கால்களுக்கு மத்தியில்
சுருட்டிக் கொண்டு
மறக்காமல்
ஞான பீடத்துக்கும்;
ரொட்டித் துண்டுக்கும்
ஆட்சிக் கும்பலுக்கு
வாலாட்டிக் கால் நக்கும்
நன்றியுள்ள அன்பு ஜீவன்...

எதார்த்தத்தை உண்மையை
நோக்கி இழுக்கத்
தெரிந்த எழுத்திற்கு
நடைமுறையில் நிஜத்தோடு
திகழத் தெரியாத
பித்துக்குளி...

இடுக்குகளில் இன்பம் கண்டு
உடுக்கை இழக்கும் ஏமாளி...
சிங்கமெனத் தன்னைத் தானே
அசிங்கப் படுத்திக் கொள்ளும்
குழப்பக் கோமாளி...

கஞ்சாவில் சுகப்பட்டு
கற்பனை வற்றி
நிறுத்திய எழுத்திற்கு
’வள்ளுவர் 1330க்கு மேல்
ஏன் எழுதவில்லை’ என
யாராவது கேட்டீர்களா?
எனக் குதர்க்கம் பேசும்
ஞான பீடம்...

புனைவுகளில் தொனிக்கும்
இணக்கம்
நனவுகளில்
உரைகளில்
மறந்து
வித்தியாசங்களே
மேதமை எனக்
காட்டும்
வித்தியாச மானுடம்.

நேற்றைய உழைப்பில்
இற்றைக்கும் எற்றைக்கும்
வாழ வேண்டிய
எழுத்து...

தமிழ் ஆத்தாவுக்குக் கஞ்சி
ஊத்தியதாய் எண்ணாத
பணிவு; அடக்கம்.

வாழ்விலும் எழுத்திலும்
எளிமையில்
இன்பம் காணத்
தெரிந்த
உள்ளத்தில் குழந்தை!

மொத்தத்தில்
கவியரசு சொன்ன
தமிழின் முடிசூடா
எற்றைக்கும் இளைக்காத
குழப்பத் திலகம்...
வாழட்டும் பல்லாண்டு!

அவரது
செயல்களின்
எதிர் திசையில் தான்
சரியானவர்கள் அதிகம்
இருந்திருக்கிறார்கள்.

நாளா வட்டத்தில் தான்
அவருக்கு
நியாயங்கள் புரியும்
காலம் கடந்த
காந்தீயம் போல...

இப்போது
கனிமொழிக்குக்
கனிமொழி...
திருவள்ளுவர் வரிசையிலாம்...
ஞானபீடத்தின்
யானை சைஸ்
அல்வா...

வாழ்க அவர் தமிழ்த் தொண்டு!

***

No comments:

Post a Comment