Monday, June 22, 2009

குருவிக் கூடு


குருவிக் கூடு


குருவி ஒன்று வீடு கட்டிக்
கொண்டிருந்தது
கூடத்துச மேல் சாளரத்தில்...

தேடிப் பிடித்து ஒரு
மூங்கில் கழியாலதைக் கலைத்துவிட
இளசு ஒன்று எத்தனிக்க

வீட்டுப் பெரிசு சொன்னார்
குருவிக் கூட்டைக் கலைக்காதே
உனக்கு வாரிசு இல்லாமல்
போய்விடும்...

விட்டுவிட்டது இளசு...

வாரிசுப் பயமா? மனித நேயமா?
இளசா? பெருசா?
எதுவோ ஒன்று... இல்லை எல்லாம்...

அங்கே இன்று
குருவிக்கூடு
அங்கீகரிக்கப் பட்டு விட்டது...

எதையும் அறியாக் குருவி மட்டும்
இன்னும் சிரத்தையாய்
கூடு கட்டிக் கொண்டிருக்கிறது

நெஞ்சுக்குள்ளே ஒரு புதுச் சொந்தம்
சுவாசித்த காற்றில் சுதந்திரம்
இன்றைய இளங்காலை
ஓர் இனிமை மிக்க ஆரம்பம்...


***


No comments:

Post a Comment