Wednesday, June 24, 2009

சந்தேகம்


சந்தேகம்



தக்‌ஷிணா மூர்த்தி
நஞ்சுண்ட கண்டன்
தென்னாடுடைய சிவனாய்
என்னாளும் இருக்கிறார்...
அமிர்தம் உண்ட
தேவர்களெல்லாம் எங்கே?
மண்ணுலகை விடுத்து
விண்ணுலகில் தான்
சாவாமல் வாழ்கிறார்களோ?


கொல்வதும் நானே
கொல்லப்படுவதும் நானே
என்னை நம்பி
”அம்பைத் தொடு, அடி”
என்று சொன்ன
கண்ணனும் ஒருநாள்
செத்தே போனான்;
கதை கேட்ட
பக்கத்து வீட்டு
அலமு கேட்டாள்
மாமா
ஒரு சந்தேகம்
செத்துப்போன கண்ணனுக்கு
சொர்க்கமா, நரகமா?

***

No comments:

Post a Comment