Friday, June 19, 2009

கலைமகள் என்ன விலைமகளா?

கருணாநிதிக்கு நோபல் பரிசு...

செய்தி: /////தமிழக முதல்வர் கருணாநிதியின் எழுத்துக்களை ஆங்கிலப்படுத்தி, அவற்றை நோபல் கமிட்டியின் பரிந்துரைக்காக அனுப்ப 12-பேர் அடங்கிய ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவுக்கு பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜி.திருவாசகம் தலைவராம்.

இந்தக் கமிட்டியின் பிற உறுப்பினர்கள்:
1. கவிப்பேரரசு வைரமுத்து
2. அகத்தியலிங்கம்
3. மருதநாயகம்
4. வி.முருகன்
5. பி.கே.பழனிச்சாமி
6. கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்
7. ரமணி
8. கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம்
9. கயல் விழி
10. எம்.ரவிச்சந்திரன்
11. சி.சிவசண்முகம்
கருணாநிதியின் எழுத்துகளை (கவிதைகள், கட்டுரைகள், [முரசொலிக்?] கடிதங்கள்) பாரதியார் பல்கலைக்கழகம் மொழிமாற்றி வெளியிடுமாம். இதற்கு ரூ. 10 லட்சம் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.
http://www.hindu.com/2008/07/07/stories/2008070759541000.htm
///////////////

கருணாநிதிக்கு நோபல் பரிசு….

கெடக்குறதெல்லாம் கெடக்கட்டும்
கிழவனைத் தூக்கி
மணையிலே வைன்னாங்களாம்…. :) :) :)

அதற்காக:



கலைமகள் என்ன விலைமகளா?


தத்தென்று பித்தென்று
       தமிழிலே எழுதினால்
              தத்துவம் ஆகி விடுமா?

பத்து இலட்சத்தில்
        பலர்கூடிப் பிதற்றினால்
               முத்தாக மாறி விடுமா?


சத்தில்லா சொற்றொடரும்
        தரமற்ற கவிதையும்
               சங்கத்தமிழ் ஆகி விடுமா?

பித்தளை ஈயம்
        பெருங்காயப் பாத்திரம்
               தங்கமென்று தேறி விடுமா?


எத்தனை காலத்து
        இலக்கிய மரபுகள்
               முத்தமிழ் கற்றுத் தருமா?

இத்ததும் பீத்ததும்
        இன்றையச் சொத்தென்று
               செந்தமிழ் செத்து விடுமா?


நயமற்ற கவிதையை
        மொழிமாற்றுச் செய்தாலே
               நல்லவை ஆகி விடுமா?

சுயமற்ற உளரலைச்
        சுகமான பொருளென்று
               சொன்னாலே விற்று விடுமா?


பாவாடை மேலாடை
        தூக்கியே பார்த்திட
               ஆங்கிலம் பொருள் தருமா?

பதைக்கின்ற செயலெலாம்
        பரவசம் எனக்கூற
               பாவலற்கு மனம் வருமா?


சுவையற்ற இயம்பலும்
        சொதப்பிய பிதற்றலும்
               தமிழ் கொல்லும் தரித்திரமே!

கலையற்ற பொருளினைத்
        தமிழின் அழகென்றால்
               பழி சொல்லும் சரித்திரமே!


பண்கெட்ட பாட்டினை
        பைத்தியக் கூத்தினை
              பாருக்குத் தமிழ் தருமா?

கண்கெட்ட குருடர்கள்
        கலையது என்பார்கள்
               கலைமாது விலைக்கு ஆகுமா?


காசுக்கு நோபலை
        யாரேனும் விற்றாலே
               கருணா நிதிக்குக் கிட்டும்!

கலைமகள் வாயின்றி
        கதறி அழும்போது
               கண்ணீரில் இரத்தம் கொட்டும்!


பாகம்: 2

ஏதுக்கும் தேறாத
        கூவத்துக் குப்பையை
               இலக்கியம் என்று மொழியவோ?

இதுவரை தாழாத
        தமிழன்னைக் குடில்மீது
               எல்லாரும் வந்து உமிழவோ?


யாசித்த பொருளதை
        யாருக்கும் தெரியாமல்
               நோபலுக்குப் பரிந்து உரைக்கவோ?

யோசிக்கத் திறமின்றி
        இருளிலே சுட்டதை
               பாருக்குத் திரிந்து உரைக்கவோ?


கன்னலே செந்தமிழே
        கற்கண்டே தேன்பாகே
               கருணைக்கு அளவு இல்லையோ?

கருத்தையே திருடினும்
        கருப்பையைச் சுருட்டினும்
               பொறுமைக்கு எல்லை இல்லையோ?


இதுவரைப் படைத்திட்ட
        இலக்கியம் யாதுக்கும்
               பரிசுக்குத் தகுதி இல்லையோ?

இவரன்றித் தமிழிலே
        இதுகாறும் பரிசிலுக்கு
               யாரேனும் பிறக்க வில்லையோ?


சூதுக்கும் வாதுக்கும்
        சூலாகிப் பெற்றதெலாம்
               சூத்திரம் சொல்லுதே அங்கே...

யாதுக்கும் தேறாத
        சாத்திரம் ஈதென்று
               சத்தியம் செய்வோம் இங்கே...


கற்பனை எல்லாம்
        விற்பனைக்கு என்றே
               கடைதனில் கிடைப்பதே போல்

கலைக்கான நோபலும்
        காவியப் பரிசிலும்
               காசுக்குச் சிக்கி விடுமோ?


மாசிலா மொழியென
        மாணிக்கச் சிலையென
               மாதவ மங்கை நல்லாள்;

ஏதமிலா மாதவள்
        இலக்கியக் கலைமகள்
               இதயத்தே ஏதோ சொன்னாள்...


இன்னும் உயிரோடு
        இருப்பது எதற்கென்று
               இயம்புக என மொழிந்தாள்!

இறந்திடத் துணிந்தேன்
        இஃதொன்றே போதும்
               என்றே தான் பொழிந்தாள்!

***


No comments:

Post a Comment